ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளை தொடர்ந்து, 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் புதிய சட்டத்தை இந்தோனேஷியா அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் வரும் 28ம் தேதி முதல் படிப்படியாக அமலுக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்றைய காலத்தில் சிறுவர்கள் அதிக நேரம் சமூக வலைதளங்களில் செலவிடுவதால் அவர்களின் கல்வி, மனநலம் மற்றும் சமூக வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.புதிய சட்டத்தின் படி, 16 வயதிற்கு குறைவானவர்கள் Instagram, Facebook, TikTok, X போன்ற சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்க முடியாது அல்லது பயன்படுத்த முடியாது. இந்த விதியை மீறும் நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. குழந்தைகளை இணையதளத்தின் தீமைகளிலிருந்து பாதுகாப்பது, சைபர் துன்புறுத்தல், தவறான தகவல்கள் மற்றும் ஆபத்தான உள்ளடக்கங்களிலிருந்து காப்பது ஆகியவை இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாக கூறப்படுகிறது. உலகளவில் பல நாடுகள் குழந்தைகளின் இணைய பாதுகாப்பை உறுதி செய்ய இதுபோன்ற கட்டுப்பாடுகளை கொண்டு வருவதையும் இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.

