ஜப்பான் பிரதமர் கிஷிடா பங்கேற்ற நிகழ்வில் குண்டுவெடிப்பு, அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார்

அரசியல் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் முதன்மை செய்தி ஜப்பான்

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பங்கேற்ற பொது நிகழ்வில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை மேற்கு ஜப்பான் பகுதியில் உள்ள வகயாமாவில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு குண்டு வீசியதில் அது வெடித்து புகை கிளம்பியது. உடனடியாக பாதுகாவலர்கள் பிரதமர் கிஷிடாவை சூழ்ந்து கொண்டு அங்கிருந்து அவரை மீட்டு காப்பாற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்த்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் நபரை சம்பவ இடத்திலேயே உடனடியாக பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதேவேளை, கைது நடவடிக்கை தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கிஷிடா பாதுகாப்பாக உள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *