விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மும்பையில் உள்ள பிரபல GSB சேவா மண்டல் சார்பில், விநாயகர் சிலைக்கு இந்த ஆண்டு பிரம்மாண்டமான அலங்காரம் செய்யப்படுகிறது. இதற்காக 66 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள், 335 கிலோவுக்கும் அதிகமான வெள்ளிப் பொருட்கள் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வளவு அதிக மதிப்புள்ள ஆபரணங்கள் மற்றும் பொருட்கள் பயன்படுத்தப்படுவதால், விநாயகர் சிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய பாதுகாப்புக்காக ரூ.703 கோடி மதிப்பிலான காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் மிக அதிக காப்பீடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளில் ஒன்றாக இது கவனம் பெற்றுள்ளது.GSB சேவா மண்டலின் விநாயகர் வழிபாடு மும்பையில் ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் பக்தர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. விழா நடைபெறும் காலத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

