நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

மக்களவையில் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. குரல்வாக்கெடுப்பு நடத்தி நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து விட்டதால் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதனையடுத்து மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு செய்தன. நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்த நிலையில், மக்களவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டு நம்பிக்கையிலா தீர்மானத்தில் ஒரு வாய்ப்பு வழங்கினோம். 2018-ல் எதிர்க்கட்சிகள் தவறவிட்ட நிலையில் இந்த முறையும் தவற விட்டு விட்டனர். 2028-ல் எதிர்க்கட்சிகள் தகுந்த முன்னெடுப்போடு வர வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 2026-ம் ஆண்டு எதிர்க்கட்சிகள் தயாராவார்கள் என நம்புகிறேன் என்றார். 2028-ல் நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்திற்கு முன் தயாரிப்புடன் வாருங்கள் என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேசாததைக்கண்டித்து எதிர்க்கட்சிகள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பிரதமர் மோடி ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக பேசி வரும் நிலையில் மணிப்பூர் பற்றி பேசாததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *