ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலின் மீது அமைக்கப்பட்ட புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். 1914-ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் ஆட்சியின் காலத்தில், ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் நோக்கில் கடலின் குறுக்கே பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டது. ஆனால், பல்வேறு இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு, இந்த பாலம் 2022-ஆம் ஆண்டில் பலவீனமடைந்தது. இதற்குப் பிறகு, 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் இந்த பாலத்தின் மூலம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன் பின்னர், ரூ. 550 கோடி மதிப்பீட்டில் புதிய உயர் தொழில்நுட்பத்துடன் பாம்பன் புதிய ரயில் பாலம் 2,078 மீட்டர் நீளம் மற்றும் கடல் மட்டத்திலிருந்து 15.5 மீட்டர் உயரம் கொண்டது. இந்த புதிய பாம்பன் ரயில் பாலத்தின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாம்பன் சாலைப் பாலத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடி, புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.இந்த பாலத்தின் வழியாக ரயில் சேவையை தொடங்கினார். அதன் பின்னர், மண்டபம் – பாம்பன் இடையே புதிய ரயில் பாதையில் ரயில் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. மேலும், பாம்பன் ரயில் பாலத்தின் செங்குத்து தூக்குப் பாலம் உயர்த்தப்பட்டு, இந்திய கடலோரக் காவல் படைக்கு சொந்தமான கப்பல்கள் கடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் 8300 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு ரயில் மற்றும் சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல். முருகன், மற்றும் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

