செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தூய்மையான குடிநீரை உருவாக்கி கொரிய விஞ்ஞானிகள் அசத்தியுள்ளனர்.தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் தினந்தோறும் உருவாகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் மூலம் சமீபத்தில் உருவான ChatGPT தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பல்கலைகழத் தேர்வு, உச்சநீதிமன்ற விசாரணை , விதவிதமான ஆடைகளுடன் தோன்றுதல், வாட்சப்பில் பதில் அனுப்புதல் , இன்ஸ்டாகிராம் என எல்லாவற்றிலும் AI ன் உதவியுடன் ஆச்சர்யதக்க வகையில் புதிய சாதனைகளை பலர் உருவாக்கி வருகிறார்கள்.
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் மூலம் கணிணி உள்ளிட்ட இயந்திரங்களுக்கு மனிதர்களைப் போன்ற சிந்தனையையும், பகுத்தறிவையும் கொடுக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். இதனால், இந்த தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் கூட சீனாவில் ஹோட்டல் ஒன்றில் ரூம் சர்வீஸ் செய்யும் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷாங்காய் நகரில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் இருக்கும் வாடிக்கையாளர் ஒருவர் உணவை ஆர்டர் செய்கிறார். சிறிது நேரத்தில் அவரின் அறைக்கு ரோபோ உணவை கொண்டு செல்கிறது. பின்னர் அவர் அந்த ரோபோவில் உள்ள ஓப்பன் என்ற பட்டனை அழுத்தியதும் அதன் மேல்பகுதி திறக்கிறது. உள்ளே இருந்த உணவு பார்சலை அவர் பெற்றுக் கொண்டதும், மீண்டும் ரோபோவின் மேல் பகுதி மூடி விடுகிறது.
இதேபோல ஒவ்வொரு துறை ரீதியாகவும் செயற்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல சாதனைகளை படைத்துவருகின்றனர். அந்த வகையில் கொரியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுத்தமான குடிநீரை தயாரித்து அசத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
கொரியாவில் டாக்டர். சன் மூன் தலைமையிலான கொரியா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் (KIST) ஆராய்ச்சியாளர்கள், மின் வேதியியல் நீர் சுத்திகரிப்பு செயல்முறைகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒரு புதுமையான தீர்வை உருவாக்கியுள்ளனர்.
இந்த புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது சோடியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் குளோரைடு போன்ற முக்கிய அயனிகளின் செறிவுகளைக் கணிக்க தோராயமாக 0.9 R² மதிப்பை துல்லியமாக மதிப்பிடுகிறது.
