அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு புதிய வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் இந்திய அரிசி இறக்குமதி கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்ததால், அந்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை டிரம்ப் முன்வைத்துள்ளார். இதற்கிடையில், கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டு வரப்படும் உரங்களுக்கும் புதிய வரிகள் விதிக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அரசியல் வட்டாரங்களில் பரவலாக விவாதிக்கப்படுகின்றன. அமெரிக்காவின் “Buy American” கொள்கையை வலுப்படுத்துவதற்காகவே டிரம்ப் இந்த வரி முடிவுகளை எடுத்திருக்கலாம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தியா தற்போது உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி நாடாக இருப்பதால், இந்த முடிவு உலக சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

