ஒரே நாளில் 4 பதக்கம்: பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வெற்றி

NRI தமிழ் டிவி இந்தியா உலகம் சிறப்பு பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024 முதன்மை செய்தி விளையாட்டு

பாரிஸ்ல் நடைபெறும் பாரா பாராலிம்பிக் போட்டிகளுக்கு மிகுந்த ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்பு மக்களிடையில் உள்ளது.

இந்தியா தனது பாரா-தடகள வீரர்களிடமிருந்து இந்த ஆண்டும் மிக சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்கிறது. ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8, 2024 வரை திட்டமிடப்பட்ட பாரா ஓலிம்பிக்ஸ், வீரம், உறுதிப்பாடு மற்றும் புதிய யுத்தியின் போட்டியாக இருக்கும்.

இந்த நிகழ்வு இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் நமது நாட்டின் பாரா-தடகள வீரர்கள் சர்வதேச அரங்கில் தொடர்ந்து புதிய சாதனை புரிந்து வருகின்றனர்.
பாரீஸ் விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் 84 பாரா விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர், அவர்களில் 32 பேர் பெண்கள்.

பாரா-சைக்கிளிங், பாரா-ரோயிங் மற்றும் பிளைண்ட் ஜூடோ ஆகிய மூன்று புதிய விளையாட்டுகளில் இந்தியாவில் இருந்து கலந்து கொள்ள உள்ளனர் .இந்த ஆண்டு நிகழ்வு இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மூன்று புதிய விளையாட்டுகளை தொடர்ந்து, ஒலிம்பிக்கில் உள்ள 22 விளையாட்டுப் பிரிவுகளில் மொத்தம் 12 போட்டிகளில் இந்தியா போட்டியிட உள்ளனர்.

இந்தியா இந்த ஆண்டுக்கான பதக்கத்தில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தனது முதல் இரண்டு பதக்கங்களை வென்றது, அவனி லெகாரா தங்க பதக்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றனர்.

மணீஷ் நர்வால் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கத்துடன் தனது வெற்றியை பதிவு செய்தார்.

பெண்கள் 100 மீட்டர் போட்டியில் ப்ரீத்தி பால் வெண்கலம் வென்றார். இன்று ஒரே நாளில் இந்தியாவிற்கு 4 பதக்கம் பெற்று தந்து அசத்தியுள்ளார்.

இதன் மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கங்களுடன் 9வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *