கோவிட் பாதிப்பால் இது வரை 40 லட்சம் இந்தியர்கள் இறந்து உள்ளனர், ஆனால் மோடி அரசு வெறும் 5 லட்சம் மட்டுமே கணக்கு காட்டுவதாக ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “பிரதமர் மோடி உண்மை பேசவில்லை. மற்றவர்களையும் பேசவிடவிடாமல் தடுக்கிறார். கோவிட் பாதிப்பினால் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு யாரும் உயிரிழக்கவில்லை என பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் முன்பே கூறியது போல, கோவிட் காலத்தில், அரசின் அலட்சியத்தால் உயிரிழந்தது 5 லட்சம் பேர் இல்லை, 40 லட்சம் இந்தியர்கள் பலியாகி உள்ளனர். மத்திய அரசு கோவிட் பாதிப்புக்குள்ளாகி இறந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.
முன்னதாக உலக சுகாதார நிறுவனம், உலகின் மொத்த கோவிட் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் நிகழ்ந்திருப்பதாகவும், அரசாங்கம் உண்மையை மூடி மறைப்பதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.