இந்தியாவிலயே காற்றாலை மின் உற்பத்தி திறனை அதிகப்படுத்துவதில் தமிழ்நாடு மூன்றாம் இடம்; டில்லியில் விருது

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

இந்தியாவிலயே காற்றாலை மின் உற்பத்தி திறனை அதிகப்படுத்துவதில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.
உலக காற்று தினம் ஆண்டுதோறும் ஜூன் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. மனிதனுக்கு மட்டுமின்றி அனைத்து தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கும் காற்று மிகவும் அவசியமானதாகும். அப்படிப்பட்ட காற்றின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 15-ம் தேதி உலக காற்று தினம் கொண்டாடப்படுகிறது. முதன்முதலில் 2007-ஆம் ஆண்டு ஐரோப்பாவில் மட்டுமே கொண்டாடப்பட்ட இந்த தினம், தற்போது ஓர் உலகளாவிய நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது.
அந்த வகையில் இன்று உலக காற்று தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று (ஜூன் 15) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், காற்றாலை திறன் அதிகப்படுத்துவதில் நாட்டிலேயே 3 வது இடத்தை பிடித்துள்ளது. இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் இதற்கான விருதினை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஸ் லகானி இ.ஆ.ப பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *