குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அவருடன் உத்தர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த வருகை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.அங்கு திரவுபதி முர்மு ஸ்ரீ ராம யந்திரத்தை பிரதிஷ்டை செய்து, பால ராமருக்கு ஆரத்தி காட்டி வழிபட்டார். நாட்டின் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் வாழ வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்தார்.

