சென்னையில் அஸ்வின் பெயரில் புதிய சாலை அமைக்கப்படும் என மாநகராட்சி அறிவிப்பு.

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு விளையாட்டு

சென்னையில், கிரிக்கெட் வீரர் அஸ்வின் வசிக்கும் தெருவுக்கு அவரது பெயரை சூட்டுவதாக சென்னை மாநகராட்சி முடிவு எடுத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை சேர்ந்த அஷ்வின் இந்திய அணியின் ஆல் ரவுண்டராக 14 ஆண்டுகளாக விளையாடினார். தற்போது சர்வதேச கிரிக்கெட் இல் இருந்து ஓய்வு பெற்றார். 500க்கும் மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெற்ற அஸ்வின், ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக விளையாடவுள்ளார். இந்நிலையில், மேற்கு மாம்பலம், ராமகிருஷ்ணாபுரம் முதலாவது தெருவில் அவரது வீடு அமைந்துள்ளது. மேலும் அஸ்வின் வீடு அமைந்துள்ள சாலைக்கு “அஸ்வின் சாலை” என பெயர் மாற்றம் செய்ய சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை அளித்திருந்தது. இதனைப் பரிசீலித்த சென்னை மாநகராட்சி, மேற்கு மாம்பலம் ராமகிருஷ்ணாபரம் முதலாவது தெருவுக்கு அஸ்வின் சாலை என்ற பெயரை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அனுமதி பெற்ற பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அஸ்வினுக்கு பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *