பழங்குடியினர் பட்டியலில் தமிழகத்தின் நரிக்குறவர், குருவிக்காரர் சேர்ப்பு- மக்களவையில் மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள்

தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.
பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதாவை, பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜூன் முண்டா மக்களவையில் நேற்று முன்தினம் அறிமுகம் செய்தார். இந்த மசோதா மீது இன்று விவாதம் நடத்தப்பட்டது. விவாதத்திற்கு பிறகு இந்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 19-ம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *