மும்பை – அமெரிக்கா நேரடி விமான சேவையை ஏர்இந்தியா தொடங்கியது

அரசியல் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் சுற்றுலா செய்திகள் நிகழ்வுகள் வட அமெரிக்கா

மும்பையிலிருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேரடி விமான சேவையை மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நேற்று தொடங்கி வைத்தார்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் கடந்த ஜனவரி மாதம் வாங்கியது. இதையடுத்து, ஏர் இந்தியா விமான சேவை மற்றும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மும்பையில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேரடி விமான சேவையை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று தொடங்கி வைத்தார். இந்தசேவை வாரத்துக்கு 3 முறைவழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான சேவையை தொடங்கிவைத்த பின்னர் அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறும்போது, “மாற்றம் மற்றும் வளர்ச்சியின் சிகரமாக விமான போக்குவரத்துத் துறை விளங்குகிறது. இதை மேலும் வேகமாக, வலுவாக உந்தித் தள்ள வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *