மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 8 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தில், அவர்கள் குடித்த இருமல் மருந்து காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் Coldrif இருமல் சிரப் தமிழ்நாட்டில் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்வில் சிறுநீரக திசுவில் Diethylene Glycol எனும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரசாயனம் மை மற்றும் பெயிண்ட் தயாரிக்க பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

