தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு விளம்பர செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகைகள் அமைக்கப்பட வேண்டும். தமிழில் பெயர்ப்பலகை அமைக்கும் போது, ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் உள்ள வார்த்தைகள் தமிழ் எழுத்துக்களை விட சிறிய அளவில் இருக்க வேண்டும். வரும் மே மாதம் 15-ந்தேதிக்குள் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் தமிழில் பெயர் பலகைகள் இருக்க வேண்டும். பிற மொழிகளில் பெயர் பலகைகள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *