கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா இயற்க்கை சிறப்பு சுற்றுச் சூழல் செய்திகள்

கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பைக் டாக்ஸி சேவைகளுக்கான முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, மாநில அரசுக்கு 6 வாரங்களில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, பின்னர் மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பெங்களூருவில் ரேபிடோ உள்ளிட்ட சில நிறுவனங்கள் பைக் டாக்சி சேவைகளை வழங்கி வருகின்றன, இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான எதிர்ப்பாக, ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், ரேபிடோ உள்ளிட்ட பைக் டாக்ஸிகளுக்கான சரியான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பு குறித்து ஓலா தரப்பில் நீதிமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இதன் பின்னணியில், ரேபிடோ மற்றும் இதர பைக் டாக்சி சேவைகளுக்கு உடனடியாக தடை விதிக்குமாறு மற்றும் 6 வாரங்களில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கிய பிறகு மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *