அமெரிக்காவில் விருப்ப நடைமுறை பயிற்சி திட்டம் ரத்து .3 லட்சம் இந்திய மாணவர்கள் அதிர்ச்சி.

அமெரிக்கா அரசியல் இந்தியா உயர்கல்வி உலகம் கல்வி மற்றும் கல்வி சார்ந்த செய்திகள் சிறப்பு செய்திகள் வேலைவாய்ப்புச் செய்திகள்

இந்திய மாணவர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பு வழங்கும் விருப்ப நடைமுறை பயிற்சி திட்டத்தை ரத்து செய்யும் மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சர்வதேச மாணவர்களுக்கு பட்டப்படிப்பு முடித்த பிறகு அமெரிக்காவில் தற்காலிகமாக வாழவும், வேலை செய்யவும் அனுமதிக்கிறது. அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்களுக்கிடையில் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது, மேலும் அதன் அதிகபட்ச பயனாளிகள் இந்திய மாணவர்கள் ஆக உள்ளனர்.இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் ஒரு வருடம் அமெரிக்காவில் வேலை செய்ய வாய்ப்பு பெறுகிறார்கள். படிப்பிற்கான விசா பெற்ற மாணவர்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அமெரிக்காவில் இரண்டு வகையான விருப்ப நடைமுறை பயிற்சித் திட்டங்கள் உள்ளன. ஒன்று, படிப்பின் போது பதிவு செய்யும் முறை, மற்றொன்று, படிப்பு முடிந்த பிறகு பதிவு செய்யும் முறை. படிப்பின் போது ஒரு மாணவர் இந்த திட்டத்தில் கலந்து கொண்டால், அவர் வாரத்திற்கு 20 மணி நேரம் வேலை செய்யலாம். வகுப்புகள் இல்லாத நேரங்களில், அவர் முழு நேர வேலை செய்யலாம். தற்போது, இந்த விருப்ப நடைமுறை பயிற்சி திட்டத்தை ரத்து செய்யும் புதிய மசோதாவை டிரம்ப் கையில் எடுத்துள்ளார். இதன் விளைவாக, 3,00,000 இந்திய மாணவர்கள் வேலை இழக்க வாய்ப்பு உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மாணவர்கள் உடனடியாக எச்1பி பணி விசாவைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவாகும். இதனால் இந்திய மாணவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். உலகம் முழுவதும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் அமெரிக்கா சென்று கல்வி பயில்கிறார்கள். 2023-24ஆம் ஆண்டில், 3.31 லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி பயின்று வருகின்றனர். இதில், 29.42 சதவீதம், அதாவது 97 ஆயிரத்து 556 மாணவர்கள் விருப்ப நடைமுறை பயிற்சித் திட்டத்தை தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *