ஒடிசா கடற்கரையிலிருந்து அடுத்தடுத்து இரண்டு பிரளய் ஏவுகணைகளை வெற்றிகரமாகச் சோதனை செய்து பார்த்தது. பிரளய் ஏவுகணை முழுமையாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஒரு பகுதி-பாலிஸ்டிக் ஏவுகணையாகும். இதில் அதிநவீன வழிசெலுத்தல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இது அதிக துல்லியத்துடன் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.இந்த ஏவுகணை பல்வேறு இலக்குகளை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது பல வகையான போர்க்கருவிகளைச் சுமந்து செல்லும் திறனும் பெற்றுள்ளது. இந்த சோதனை ஏவுதலை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) நடத்தியது.பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலின்படி, கண்காணிப்பு சென்சார்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரண்டு ஏவுகணைகளும் திட்டமிட்ட பாதையை சரியாகப் பின்பற்றி, அனைத்து தொழில்நுட்ப மற்றும் விமான நோக்கங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றியதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

