ஆசிய டேபிள் டென்னிஸில் இந்தியா முதல் முறையாக பதக்கம் வென்றது

இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஷிப்யில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா முதன்முறையாக பதக்கம் வென்றுள்ளது. கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் நடைபெறும் இந்த சாம்பியன்ஷிப்பில், இந்திய மகளிர் அணி கால் இறுதியில் தென் கொரியாவுடன் மோதியது. பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற தென் கொரியாவை எதிர்கொண்டு, இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம், இந்திய மகளிர் அணி இந்த தொடரில் முதன்முறையாக பதக்கம் வெல்வதை உறுதி செய்துள்ளது. தென் கொரியாவுக்கு எதிரான போட்டியில், இந்தியாவின் 92-ம் நிலை வீராங்கனையான அய்ஹிகா முகர்ஜி, உலகத் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ஷின் யூபனை 11-9, 7-11, 12-10, 7-11, 11-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். அடுத்த ஆட்டத்தில், மணிகா பத்ரா வெற்றியை பெற்றதன் மூலம், இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. ஆனால் அடுத்த இரண்டு ஆட்டங்களில் தென் கொரியா வெற்றிபெற்று போட்டியை 2-2 என்ற சமநிலைக்கு கொண்டு வந்தது. கடைசி ஆட்டத்தில், அய்ஹிகா முகர்ஜி 7-11, 11-6, 12-10, 12-10 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள ஜியோன் ஜிஹீயை வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி அரை இறுதியில் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *