கீழடியில் பத்தாம் கட்ட அகழ்வாய்வில் வர்ணம் தீட்டப்பட்ட பானைகள் கண்டுபிடிப்பு

கலை / கலாச்சாரம் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி

சிவகங்கை மாவட்டம், கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு ஜூன் மாதம் தொடங்கியது. இதுவரை, ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன; 10வது கட்ட அகழாய்வில் சுடுமண் பானைகள் அதிகமாகக் கிடைக்கின்றன. தற்போதைய அகழாய்வில் மூன்று வர்ணம் தீட்டிய பானைகளும், வர்ணம் தீட்டப்படாத பானைகளும் கண்டறியப்பட்டுள்ளன. வர்ணம் தீட்டிய பானைகளில் ஒரே ஒரு பானையை தவிர, மற்ற பானைகள் பண்டைய கால மக்கள் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு பானையின் மேற்புற வெளிப்பகுதியில் இரண்டு வட்ட கோடுகள் மற்றும் கீழ்பகுதியில் மூன்று வட்ட கோடுகள் காணப்படுகின்றன. மற்றொரு பானையின் வெளிப்புற நடுப்பகுதியில் மூன்று வட்ட கோடுகளின் நடுவே இலைகள் வரையப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 2,600 ஆண்டுகளுக்கு முன்பே சுடுமண் முத்திரைகள் கண்டறியப்பட்டுள்ளதால், பானைகளிலும் அச்சு வைத்து வரைதிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சில பானைகள் அடர்சிவப்பு நிறத்தில் உள்ளன. இதனால், இதில் முக்கியமான பொருட்களை வைத்திருக்க வாய்ப்பு உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *