ஐபில் முதல் கால அட்டவணை வெளியீடு; தேர்தல் நடந்தாலும் அனைத்து போட்டிகளும் இந்தியாவிலேயே நடக்கும் என அறிவிப்பு

இந்தியா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விளையாட்டு

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் என்று ஐபிஎல் தொடரின் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
அனைவராலும் எதிர்பார்க்கபட்ட ஐபிஎல் தொடரின் 17வது சீசன் அடுத்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கும் என ஐபிஎல் தொடரின் அருண் துமால் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், போட்டி இந்தியாவில் நடைபெறுமா என அனைவருக்கும் சந்தேகம் எழுந்த நிலையில், போட்டிகள் முழுமையாக இந்தியாவிலேயே நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரை மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ளோம். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றாலும் போட்டிகள் முழுதும் இந்தியாவில்தான் நடைபெறும். இது தொடர்பாக அரசுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். போட்டியின் முதல் இரண்டு வாரங்களுக்கான அட்டவணையை வெளியிடுவோம். மக்களவை தேர்தலுக்கான தேதிகள் அடுத்த மாத தொடக்கத்தில் அரசு அறிவிக்கும்” என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் அட்டவணை வெளியான பின் இரண்டாம் கட்ட அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *