சென்னையில் வரவிருக்கும் புதிய பிரமாண்டமான பொழுதுபோக்கு பூங்கா.

இந்தியா சிறப்பு சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு

சென்னையில் விரைவில் திறக்கவுள்ள வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா, இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டரை கொண்டதாக இருக்கும். பெங்களூரு மற்றும் கோவாவில் மிகவும் பிரபலமான இந்த பூங்கா, தற்போது சென்னையில் தனது புதிய முகத்தை வெளிப்படுத்தவுள்ளது. 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் திறக்கவுள்ள இந்த பூங்கா, இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் ஆகும்.நியூயார்க் மற்றும் லண்டனில் உள்ள மிகப்பெரிய ரோலர் கோஸ்டர்களைப் போலவே, சென்னையின் வொண்டர்லாவில் அமைக்கப்படும் ரோலர் கோஸ்டரும் மிகப்பெரிய அளவிலானது என கூறப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் 62 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த பொழுதுபோக்கு பூங்கா, சுமார் 400 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படுகிறது. இந்த பூங்காவில் ரோலர் கோஸ்டருக்கு அப்பாற்பாக, பல்வேறு வயதினருக்கான தண்ணீர் சவாரிகள், கேம்ஸ், உணவகங்கள் மற்றும் ஓய்வு இடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த திட்டம் தொடர்பாக வொண்டர்லா நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, தமிழக அரசின் முழுமையான ஆதரவுடன் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளதாகவும், பணிகள் தீவிரமாக முன்னேறி வருகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் சுற்றுலா கொள்கையின் ஒரு அங்கமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *