புதிய பாம்பன் ரயில் பாலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில், மண்டபம் மற்றும் ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் பாம்பன் கடலில் புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. 550 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது நிறைவடைந்துள்ளன. மேலும், ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான ஆய்வுப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வின் போது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தொடர்ந்து கப்பல் மற்றும் ரயில்கள் இயக்கி இரண்டு கட்டமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இறுதி கட்ட ஆய்வை மேற்கொள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் சிறப்பு ரயிலில் மண்டபத்திற்கு வந்தார். அவர் பாம்பன் பழைய ரயில் பாலத்தை திறந்து, புதிய ரயில் பாலத்தில் ரயிலை இயக்கி ஆய்வு செய்தார். பாம்பன் சாலை பாலத்தில் அமைக்கப்பட்ட மேடையில், பிரதமர் மோடி பாலத்தை திறப்பது தொடர்பாக அதிகாரியுடன் ஆலோசனை நடத்தினார். இதன்பின், பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு முன்னதாக, அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், பாம்பன் புதிய ரயில் பாலம் மார்ச் மாதத்தில் பிரதமர் மோடியால் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *