உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பாதயாத்திரையாக வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் குருத்தோலைகளை கைகளில் ஏந்தியவாறு ஓசன்னா பாடலை பாடி பங்கேற்றனர். இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பர். அதன்படி இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22,ம் தேதி சாம்பல் புதன் அன்று தொடங்கியது. அதனை தொடர்ந்து உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. திரளான பக்தர்கள் குருத்தோலைகளை கைகளில் ஏந்தியவாறு பவனியாக சென்றனர். அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று மனம் உருக பிரார்த்தனை செய்தனர்.