சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதீனா நகரங்களில் கடுமையான வானிலை நிலவுகிறது. கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு, புழுதிப் புயல் மற்றும் ஆலங்கட்டி மழை போன்ற வானிலை நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. இந்த மோசமான வானிலை நாளை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிகாரிகள் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். கடுமையான வானிலை மெக்கா மற்றும் மதினா நகரங்களில் முக்கிய இடையூறுகளை உருவாக்கியுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அந்த பகுதிகளில் போக்குவரத்து மிகவும் சிரமமாக உள்ளது. தூசிப் புயல்கள் குடியிருப்பாளர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது, இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை மேலும் அதிகமாக பெய்து சேதங்களை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் வீட்டில் உள்ளே இருக்கவும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் அதிகாரிகள் பொதுமக்களை அறிவுறுத்தி வருகின்றனர். எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கான பதிலளிக்க அவசர சேவைகள் தயார் நிலையில் உள்ளன, மேலும் நிலைமையை சமாளிக்கவும் பொதுமக்களை பாதுகாக்கவும் அரசாங்கம் கடுமையாக உழைக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை நிபுணர்கள் கணிக்கின்றனர். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், அதிகாரப்பூர்வ ஆலோசனைகளை பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின்சாரத் தடைகள் மற்றும் தண்ணீர் பற்றாக்குறைக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

