பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் புதிய அரசியல் தொடங்கியுள்ளார்;ஜன் சுராஜ் என கட்சிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தேர்தல் செய்திகள் 2024 நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பாஜக பெற்றதற்கும், குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி இந்திய பிரதமரானதுக்கு முக்கிய காரணம் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஆவார். இந்நிலையில், முதன்முதலாக ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து தனது கட்சியின் வெற்றிக்காகப் பாடுபடப் போவதாக அறிவித்திருந்தார் பிரசாந்த் கிஷோர். ஜன் சுராஜ் (மக்கள் நல்லாட்சி)’ என்ற பெயரில் புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் தனது கட்சிக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜன் சுராஜ் கட்சி அரசு அமைந்தால், பிகாரில் கல்வி அமைப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ‘ஜன் சுராஜ்’ கட்சி தனித்துப் போட்டியிடுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *