ரெயில்ஒன்’ ஆப் மூலம் அனைத்து ரெயில் சேவைகளை ஒரே செயலியில் அறிமுகம்.

இந்தியா சிறப்பு சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு

இந்தியாவில் கோடிக்கணக்கான பயணிகள் தினமும் ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது, பயணிகள் ரெயில் சேவைகளை பெற வெவ்வேறு செல்போன் செயலிகளை பயன்படுத்திக்கின்றன. எக்ஸ்பிரஸ் ரெயில்களில் டிக்கெட்டுகள் மற்றும் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ‘ரெயில் கனெக்ட்’ என்ற செயலி உள்ளது. புறநகர் ரெயில்களில் பயண செய்வதற்கான டிக்கெட் பெற ‘யு.டி.எஸ்.’ செயலி உள்ளது. இதுதவிர, தனியார் துறை செயலிகளும் இயங்கி வருகின்றன. இதற்கிடையே, இந்திய ரெயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில் ‘ரெயில்ஒன்’ என்ற செல்போன் செயலியை ரெயில்வே அமைச்சகம் உருவாக்கி வந்தது. இந்த செயலியை ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிமுகம் செய்து வைத்தார். இந்த ரெயில் ஒன் செயலியில், முன்பதிவு ரெயில் டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், நடைமேடை டிக்கெட், ரெயில்கள் மற்றும் பி.என்.ஆர். எண் குறித்த விசாரணை, பயண திட்டமிடல், ரெயில் உதவி சேவைகள், ரெயிலில் உணவு முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெறலாம். இதனால் ரெயில்வே சேவைகளுக்கு இனி தனித்தனி செயலி பதிவிறக்கம் செய்து வைத்து இருக்க தேவையில்லை என்பதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *