சபரிமலையில் நவம்பர் 16ஆம் தேதி மண்டல-மகரவிளக்கு விழாவைக் கருத்தில் கொண்டு சபரிமலை கோயில் திறக்கப்பட்டதிலிருந்து, இதுவரை 1,36,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஸ்ரீஜித் தெரிவித்தார். கோயிலில் செய்யப்பட்டுள்ள காவல் ஏற்பாடுகள் குறித்து அவர் விவரித்தார்.அவரின் தகவலின்படி, முதல் நாளிலேயே 55,000 பேர் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துள்ளனர். யாத்திரை மேம்பாடாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற, இந்த சீசனில் மொத்தம் 18,000 போலீஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தற்போதைய நிலையில் சன்னிதானம், பம்பா மற்றும் நிலக்கல்லி பகுதிகளில் 3,500 போலீஸார் பணியில் செயல்பட்டு வருகின்றனர்.பக்தர்கள் கோயிலுக்கு வரும்போது மற்றும் திரும்பும்போது காவல்துறை வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். ஒரு நாளில் அதிகபட்சம் 90,000 பக்தர்கள் தரிசனத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதில்70,000 பேர் மெய்நிகர் வரிசை முன்பதிவு மூலம்,20,000 பேர் ஸ்பாட் புக்கிங் மூலம் அனுமதி பெறுவார்கள்.அனைத்து பக்தர்களும் சுமுகமான யாத்திரையை அனுபவிக்க, மெய்நிகர் வரிசை பாஸ் அதே நாளுக்கே வழங்கப்பட வேண்டும் என காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

