பிப்.12ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சபாநாயகர், ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது என கூறினார்.மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையில்; “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் 12.2.2024ஆம் நாள் திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும். அவ்வமயம் தமிழ்நாடு ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார்.2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 19 ஆம் நாள், திங்கட்கிழமை, காலை 10.00 மணிக்கு பேரவைக்கு அளிக்கப்படும். மேலும், 2024-2025-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள், 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள், 20 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அன்றும், 2023-2024-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி), 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள், 21 ஆம் நாள் புதன்கிழமை அன்றும் பேரவைக்கு அளிக்கப்பெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

