நாளை நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்கள்.

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி

நாளை ஜனவரி 31ம் தேதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் 2025ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது. இந்த கூட்டத்தொடர் நாளை முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், மார்ச் 10ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் வரை இந்த கூட்டத்தொடர் தொடரும். மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யவுள்ளார். இந்த கூட்டத்தொடரில், அந்த பட்ஜெட் மசோதாவுடன் சேர்ந்து மொத்தம் 16 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. வக்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவது முக்கியமானது. மத்தியபாஜக அரசு, ஏற்கனவே உள்ள முசல்மான் வக்பு சட்டத்தை மாற்றி புதிய வக்பு சட்ட திருத்தத்தை முன்வைக்க உள்ளது. இஸ்லாமியர்களின் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடங்களை அரசு நிர்வகிக்க வேண்டும் என இந்த சட்ட திருத்தம் முன்மொழிகிறது. இதற்கான எதிர்ப்பு கட்சி சார்ந்த அமைப்புகள் கடுமையாக எதிர்கொள்கின்றன. இந்த சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தால், நாடாளுமன்றத்தில் கடுமையான குழப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரயில்வே மற்றும் வங்கி சட்டங்களில் திருத்தம் செய்யும் மசோதாக்கள் உட்பட பல மசோதாக்கள் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன. தாக்கல் செய்யப்பட உள்ள சில மசோதாக்களின் விவரங்கள் கீழ்வருமாறு உள்ளன: பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா, 2024; எண்ணெய் வயல்களின் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு தொடர்பான திருத்த மசோதா, 2024; கொதிகலன்கள் (பாய்லர்) மசோதா, 2024; கோவா மாநிலத்தின் சட்டமன்றத் தொகுதிகளில் பட்டியலின பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைக்கும் மசோதா; ஏற்றுமதி சட்டத்திருத்தம், 2024; கடல் மூலம் பொருட்களை எடுத்துச் செல்லும் மசோதா, 2024; கடலோர கப்பல் மசோதா, 2024; வணிகக் கப்பல் மசோதா, 2024; நிதி மசோதா, 2025; விமானப் பொருள்களில் ஆர்வங்களைப் பாதுகாத்தல் மசோதா, 2025; “திரிபுவன்” சஹ்காரி பல்கலைக்கழக மசோதா, 2025; குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் மசோதா, 2025. ஆகியவன ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *