நடிகர் கஞ்சா கருப்பு அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

ஆரோக்கியம் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு மருத்துவம் முதன்மை செய்தி

சென்னையில் போரூரில் சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் வெளிநோயாளிகளாக தினமும் ஏராளமான மக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்நிலையில், நடிகர் கஞ்சா கருப்பு சிகிச்சைக்காக இன்று காலை 7 மணிக்கு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் இல்லாததால், மருத்துவர்கள் ஏன் வரவில்லை என கூறி மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு சிகிச்சை அளிக்க 3 மணி நேரமாக மருத்துவர்கள் இல்லாமல் இருந்திருக்கின்றனர். நீண்ட நேரம் கழித்தும் மருத்துவர்கள் வராததால் நடிகர் கஞ்சா கருப்பு ஆத்திரத்தில் , மக்களுடன் இணைந்து மருத்துவர்களின் இல்லாததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார். காலை 7 மணியிலிருந்து மருத்துவர்கள் இல்லாமல் காக்கப்பட்டதாகக் கூறி, அவர் போராட்டத்தில் ஈடுபட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், போரூரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *