கோலாகலமாக தொடங்கிய சர்வதேச சதுரங்க உலகக் கோப்பை போட்டி ; தமிழக வீரர்கள் களம் காண்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு

இந்தியா செய்திகள் தமிழர் விளையாட்டு தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விளையாட்டு

சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் உலகக் கோப்பை 2023 தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் துவங்கியுள்ள நிலையில் இந்த தொடரில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் உலகக் கோப்பை 2023 தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடைபெற்று வருகிறது. ஓபன் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளாக நடைபெற்று வரும் சதுரங்க உலகக் கோப்பை தொடரில் ஓபன் பிரிவில் 206 போட்டியாளர்களும், மகளிர் பிரிவில் 103 வீராங்கனைகளும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
உலகின் முன்னணி நட்சத்திரங்களான நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானா மற்றும் சோ வெஸ்லி, நெதர்லாந்தை சேர்ந்த அனிஷ் கிரி, சீன வீராங்கனை ஜு வெஞ்சுன், ரஷ்யாவின் அலெக்சாண்டிரா கோரியாச்சினா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் டி குகேஷ், விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகேசி, பிரக்ஞானந்தா, நிஹல் சரின், ஸ்ரீநாத் நாராயணன், புரானிக் அபிமன்யு, அதிபன், கார்த்திக் வென்கட்ராமன், ஹர்ஷா பரதக்கோட்டி ஆகியோர், மகளிர் பிரிவில் கொனேரு ஹம்பி, ஹரிகா துரோணவள்ளி, வைஷாலி ரமேஷ் பாபு, திவ்யா தேஷ்முக், நந்திதா, கோமேஷ் மேரி, பிரியங்கா நுட்டாக்கி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
7 சுற்றுகளாக நடைபெறும் இந்த தொடர் ஜூலை 30ல் தொடங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஓபன் பிரிவுக்கான இறுதிப் போட்டி மற்றும் 3 ஆம் இடத்திற்கு போட்டி ஆகஸ்ட் 26 ஆம் தேதியும், டை பிரேக்கர் போட்டி மற்றும் நிறைவு விழாவானது ஆகஸ்ட் 27 ஆம் தேதியும் நடத்தப்படவுள்ளது.
மகளிருக்கான போட்டிகள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி இறுதி மற்றும் 3 ஆம் இடத்திற்கான போட்டியும், ஆகஸ்ட் 24 ஆம் தேதி டை பிரேக்கர் மற்றும் நிறைவு விழாவுடன் முடிக்கும் படி அட்டவணை திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த உலகக் கோப்பை தொடரில் தமிழக வீரர் வீராங்கனைகளின் ஆதிக்கம் மிகுந்து காணப்படுவது கூடுதல் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. தமிழகத்தின் முன்னணி வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, அதிபன், கார்த்திக் வெங்கட்ராமன், வைஷாலி, நந்திதா பி வி உள்ளிட்டோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், உலகக் கோப்பை தொடரில் தமிழர்களின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *