அனல்பறந்த மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 17 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச்சென்ற மாடுபிடி வீரர் கார்த்திக்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் செய்திகள் தமிழர் விளையாட்டு தமிழ்நாடு நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மண்மணம் மற்றவை முதன்மை செய்தி விவசாயம் விளையாட்டு

10 சுற்றுகளாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. மதுரை மாவட்டம் பிரபல அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டில் வெற்றி பெரும் வீரர்களுக்கு ஏராளமான கார் உள்ளிட்ட பரிசு பொருட்களும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 10 சுற்றுகளாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. 817 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 400 வீரர்கள் களம் கண்டனர்.
அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த வீரர் கார்த்தி 17 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார். 13 காளைகளை அடக்கி ரஞ்சித்குமார் 2-வது இடம்; 9 காளைகளை அடக்கி முரளிதரன், முத்துக்கிருஷ்ணன் 3-ம் இடம் பிடித்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அவனியாபுரத்தைச் கார்த்திக்கிற்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. கார்த்திக்கிற்கு அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் காரை பாரிசாக வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *