ஹாங்காங்கில் நடைபெற்ற இந்திய கலாசார கலைவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

உலகம் கலை / கலாச்சாரம் சமூக வலைதளங்கழ் சிறப்பு செய்திகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள்

ஹாங்காங்கில் அமைந்துள்ள டீ ஹவுஸ் திரையரங்கில் நடைபெற்ற இந்திய கலாசார கலைவிழா, பார்வையாளர்களுக்கு சிறப்பான அனுபவங்களை வழங்கி வெகுவாக கவர்துள்ளது. போர்கீத் பாடலின் மென்மையான இசை, அசாமின் சத்ரிய நடனத்தின் அழகான அசைவுகள் மற்றும் கேரளாவின் மோகினியாட்டம் ஆகியவை அனைவரையும் கவர்ந்தன. இந்த நிகழ்வில் எகிப்து, ஜிம்பாப்வே மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் கான்சல் ஜெனரல்களை உட்படச் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். ஹாங்காங் மற்றும் மக்காவ் SAR களில் உள்ள இந்தியத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், இந்தியாவின் புகழ்பெற்ற கலைஞர்கள் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். பல்வேறு இந்திய அமைப்புகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய பார்வையாளர்களுக்கு, இந்திய மரபுகள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் செழுமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த கலை நிகழ்ச்சி மிகுந்த வசீகரமாக அமைந்தது. கிருஷ்ணர் மற்றும் கோபிகைகள் மீது உள்ள ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் ‘கோபினி பிரானா’ என்ற பாடலை, பரதநாட்டியம் மற்றும் சத்திரிய நடனத்தில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் மோனிஷா தேவி கோஸ்வாமி மிக அழகாக பாடி, பார்வையாளர்களை கவரும் வகையில் நிகழ்த்தினார். கிருஷ்ணரின் குழந்தைப் பருவத்தின் விளையாட்டுகளை அவர் தனது முக பாவங்களின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தினார். அதன் பிறகு, ரேஷ்மி பதியாத் ‘சொல்லுகெட்டு’ என்ற மோகினியாட்டம் நடனத்தை ஆடி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். டாக்டர் கோஸ்வாமியின் சத்ரிய நடனம் ஒன்பது வகை உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியது. பார்வதிதேவியாக மாறி நடனம் ஆடிய ரேஷ்மா, மகிஷாசுர வதக் காட்சியில் தனது அபிநயத்தால் தனித்துவமான கலைத்திறனை வெளிப்படுத்தினார். கலாசார கலை நிகழ்ச்சி மூலம் பரஸ்பர பாராட்டுகளை பெற்ற கலைஞர்களை கான்சல் ஜெனரல் கவுரவித்தார். இந்தியாவின் செழுமையான கலாச்சாரம், ஹாங்காங் மக்களின் இதயத்தில் நிலைத்த இடத்தை பெற்றுள்ளது. மேலும் சவுதி அரேபியாவில் அல் அசா தமிழ் சங்கம் உறுப்பினர்கள் சார்பாக தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *