ஜனவரி 5-ல் நடைபெறும் சென்னை மாரத்தான் போட்டி.

இந்தியா சிறப்பு செய்திகள் விளையாட்டு

ஃபிரெஷ்ஒர்க்ஸ் இன்க் மற்றும் சென்னை ரன்னர்ஸ் இணைந்து 2025-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி சென்னை மாரத்தான் போட்டியின் 13-வது பதிப்பை நடத்தவுள்ளனர். இந்த நிகழ்வில் 25,000-க்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டிக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது, மேலும் முன்பதிவிற்கான இறுதி தேதி வரும் 10-ம் தேதி ஆகும். வாட்ஸ்அப் செயலியின் மூலம் முன்பதிவு செய்வதற்கான புதிய வசதி இம்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.முழு மாரத்தான் போட்டி, நேப்பியர் பாலத்திலிருந்து ஆரம்பித்து, மெரினா கடற்கரை வழியாக கலங்கரை விளக்கத்தை நோக்கி செல்லும். பின்னர், மத்திய கைலாஷ் மற்றும் டைடல் பார்க் ஆகியவற்றைக் கடந்து கிழக்கு கடற்கரை சாலையை நோக்கி முன்னேறும். முந்தைய ஆண்டின் மாதிரியே, இந்த ஆண்டு நடைபெறும் மாரத்தான் நிகழ்வுகள் நேப்பியர் பாலம் மற்றும் எலியட்ஸ் கடற்கரை என்ற இரண்டு தொடக்க இடங்களை கொண்டுள்ளது. பெர்ஃபெக்ட் 20 மைலர் மற்றும் 10 கி.மீ. ஓட்டம் ஆகியவை நேப்பியர் பாலத்திலிருந்து தொடங்கும், மேலும் எலியட்ஸ் கடற்கரையில் அரை மாரத்தான் நிகழ்வு நடைபெறும். இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், முழு மாரத்தான், பெர்ஃபெக்ட் 20 மைலர் மற்றும் அரை மாரத்தான் 10 கி.மீ. ஆகிய போட்டிகள் நிறைவடையும் இடமாக இருக்கும். 10 கி.மீ. ஓட்ட நிகழ்வுக்கு சிபிடி ஐபிஎல் மைதானம் இறுதி முனையாக இருக்கும் என போட்டி அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *