விண்வெளியில் 2 செயற்கைக் கோள்களை இணைத்து இஸ்ரோ புதிய சாதனை.

அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்திய வணிகம் இந்தியா உலகம் கண்டுபிடிப்பு சிறப்பு செய்திகள் விண்வெளி சார்ந்தவை

இந்தியா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை உருவாக்கிவருகிறது. மேலும், விண்வெளியில் தனக்கே உரித்தான ஆய்வு நிலையத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்கலங்கள் 2028-ம் ஆண்டு முதல் விண்ணில் தொடர்ந்து செலுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்படவுள்ளன. இத்தகைய விண்வெளி திட்டங்களுக்கு, ஒருநாடு ஸ்பேடெக்ஸ் (SPADEX – ஸ்பேஸ் டாகிங் எக்ஸ்பிரிமென்ட்) என்ற நுட்பத்தின் கீழ் செயற்கைக்கோள்களை ஒருங்கிணைத்தல் மற்றும் விடுவித்தல் போன்ற பரிசோதனைகளில் வெற்றி பெறுவது அவசியமாகும்.இஸ்ரோ, கடந்த டிசம்பர் 30-ந் தேதி 2 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தியது. அதன் பிறகு, அவற்றின் சுற்றுவட்டப்பாதை இடைவெளிகளை மெதுவாக குறைத்து, ஜனவரி 16-ந் தேதி 2 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டன. இதன் மூலம் ‘விண்வெளி டாக்கிங்’ தொழில்நுட்பத்தை கொண்ட 4-வது நாடாக இந்தியா பெருமை பெற்றது. பின்னர், மார்ச் 13-ந் தேதி இந்த இரட்டை செயற்கைக்கோள்கள் மீண்டும் பிரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த சூழலில், இஸ்ரோ நிறுவனம் நேற்று 2-வது முறையாக ஸ்பேஸ் டாக்கிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 2 செயற்கைக்கோள்களை இணைக்கும் சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. “இஸ்ரோ 2-வது ஸ்பேடாக்கிங் முறையில் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக இணைத்ததை அறிவிப்பதில் மகிழ்ச்சி ” என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *