முடிவுக்கு வந்தது நூல் அஞ்சல் சேவை.

இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி

இந்திய அஞ்சல் துறை, 18ஆம் தேதி முதல் நூல் அஞ்சல் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு, புத்தக ஆர்வலர்கள் மற்றும் புத்தகப் பதிப்பகங்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் இதற்கான முன்னறிவிப்பு வழங்கப்படவில்லை. இந்திய அஞ்சல் துறையில் 19,101 அஞ்சல் எண்கள் மற்றும் 1,54,725 தபால் நிலையங்கள் உள்ளன, இதனால் பெரும்பாலான பார்சல்களை ஒரு வாரத்திற்குள் கொண்டு சேர்க்க முடிகிறது. உள்ளூருக்குள் அனுப்பப்படும் பார்சல்கள் அடுத்த நாளே டெலிவரி செய்யப்படுவதால், இது பயனாளர்களுக்கு வசதியாக அமைந்துள்ளது. கல்வி மற்றும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க, நாடு முழுவதும் அறிவைப் பரப்புவதற்காக ‘நூல் அஞ்சல்’ சேவையை அறிமுகம் செய்து, அஞ்சல் துறை செயல்படுத்தி வந்தது. நாட்டில் உள்ள தனியார் அஞ்சல் சேவைகளில் காணப்படாத வகையில், நூல் அஞ்சல் சேவையில் ஐந்து கிலோ புத்தகங்களை அனுப்புவதற்கான கட்டணம் வெறும் 80 ரூபாயாக இருந்தது. வாசிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்க இந்த குறைந்த விலையில் அஞ்சல் சேவையை வழங்கப்பட்டது. புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் மாத/வார இதழ்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட்டன. இந்த சேவையின் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்த நிலையில், எந்த விவாதம், முன்னெச்சரிக்கை அல்லது வாடிக்கையாளர்களின் ஆலோசனை இல்லாமல், நூல் அஞ்சல் சேவையை நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. கடந்த வாரம் திடீரென இரவோடு இரவாக ‘நூல் அஞ்சல்’ விருப்பத்தை மென்பொருளில் இருந்து நீக்கியது அஞ்சல் துறை, இதனால் சில அஞ்சல் துறை ஊழியர்களுக்கும் இதுகுறித்து தெரியவில்லை. இந்தச் சேவையை நிறுத்துவது, பதிப்பகத் துறைக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.வாசகர்கள் ரூ. 100 விலையுள்ள புத்தகங்களைப் பெறுவதற்காக ரூ. 78 அஞ்சல் கட்டணம் செலுத்துவதில் தயக்கம் காட்டுகிறார்கள். இந்த நிலைமை, இந்தியாவில் ஏற்கெனவே பலவீனமாக உள்ள வாசிப்பு கலாசாரத்தை மேலும் பாதிக்கக்கூடிய அபாயத்தை உருவாக்கும் என அறிஞர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *