ஜூலை 1 முதல் ரயில் பயணிகள் ‘தத்கல்’ டிக்கெட் புக் செய்ய ஆதார் கட்டாயம்.

அரசியல் இந்தியா சிறப்பு சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு

ஜூலை 1, 2025 முதல் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயமாக்குவதாக இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. IRCTC இணையதளத்திலோ அல்லது ரயில் நிலைய முன்பதிவு கவுண்டரிலோ டிக்கெட் எடுக்க, உங்கள் ஆதார் எண்ணைக் கொடுத்து, அதை உறுதிப்படுத்த வேண்டும். இது, தட்கல் டிக்கெட்டுகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யவும் எடுக்கப்பட்ட ஒரு முடிவு என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. தட்கல் டிக்கெட்டுகள் குறைந்த நேரத்தில் விற்றுவிடுவதால், சில தரகர்கள் இதைப் பயன்படுத்தி, டிக்கெட்டுகளை மொத்தமாக பதிவு செய்து, பின்னர் அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால், சாமானிய பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பது கடினமாக உள்ளது. இனி ஆதார் அட்டை மூலம், ஒருவர் ஒரு முறை மட்டுமே டிக்கெட் புக் செய்ய முடியும் என்று ரயில்வே உறுதி செய்யும். இது மோசடிகளைக் குறைத்து, முன்பதிவு முறையை நியாயமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. IRCTC இணையதளத்தில் தட்கல் டிக்கெட் பெற, உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர், ஆதாரத்துடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டு முன்பதிவை உறுதி செய்ய வேண்டும். ஒரு ஆதார் எண்ணை வைத்து ஒரு மாதத்தில் அதிகபட்சம் நான்கு டிக்கெட்டுகள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என ரயில்வே அமைச்சரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *