டிட்வா புயல் தாக்கம்: அவசரகால நிலையை அறிவித்த இலங்கை அரசு.

இயற்கை பேரிடர் இலங்கை உலகம் சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி வானிலை

இலங்கையில் டிட்வா புயல் ஏற்படுத்திய பேரழிவை எதிர்கொள்ள அந்நாட்டு அரசு அவசரகால நிலையை அறிவித்துள்ளது. கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பல பகுதிகளை முடக்கியுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சுமார் 130 பேர் மாயமான நிலையில் உள்ளனர். மீட்பு பணிகள் பல இடங்களில் தடம் புரண்டதாலும், வெள்ளநீர் குறையாமல் இருப்பதாலும், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆயிரக்கணக்கான குடிமக்கள் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மின்சாரம் மற்றும் சாலைப் போக்குவரத்து பல இடங்களில் முடங்கியுள்ளன. இராணுவம், காவல்துறை மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நெருக்கடி சூழ்நிலையை சமாளிக்க சர்வதேச சமூகமும் உதவி அளிக்க முன்வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *