கோவாவில் உலகிலேயே மிக உயரமான ராமர் சிலை; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

அரசியல் ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கோயில்கள் சுற்றுலா செய்திகள் திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

தெற்கு கோவாவின் பர்தகாலியில் உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண ஜீவோட்டம் மடம் உள்ளது. இது இந்தியாவின் மிக பழமையான துறவியர் மட நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த மடத்தின் 550-வது ஆண்டு விழாவையொட்டி நவம்பர் 27 முதல் டிசம்பர் 7 வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் இன்றைய விழாவில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் மோடி மடத்தில் அமைக்கப்பட்டுள்ள ராமரின் 77 அடி உயர வெண்கல சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மேலும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட ராமாயண தீம் பார்க்கையும் மோடி திறந்து வைத்தார்.
குஜராத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் ஒற்றுமைக்கான சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதர்தான், இந்த சிலையை உருவாக்கியுள்ளார். இது உலகிலேயே மிக உயரமான ராமரின் சிலையாகும். இந்த விழாவில் கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த், கவர்னர் அசோக் கஜபதி ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “சமூகம் ஒன்றுபடும்போது, ​​ஒவ்வொரு துறையும் ஒன்றாக நிற்கும்போது, ​​நாடு ஒரு பெரிய பாய்ச்சலை ஏற்படுத்துகிறது. இன்று, இந்தியா ஒரு கலாச்சார மறுமலர்ச்சியை அனுபவித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *