செல்லப்பிராணி உரிமம் பெற காலக்கெடு நீட்டிப்பு – சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பு!

அரசியல் ஆரோக்கியம் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு மருத்துவம் மருத்துவம்

சென்னையில் செல்லப்பிராணிகளுக்கான மைக்ரோசிப் பொருத்துதல், தடுப்பூசி செலுத்துதல், உரிமம் வழங்குதல் போன்ற சேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. முதலில் நவம்பர் 23, 2025 வரை என நிர்ணயிக்கப்பட்ட உரிமம் பெறும் காலக்கெடு, பின்னர் டிசம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது தொடர்ச்சியான மழையையும், மக்கள் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி இந்த காலக்கெட்டினை மேலும் ஒரு வாரம் நீட்டித்து, டிசம்பர் 14, 2025 வரை மாற்றியுள்ளது.திரு.வி.க. நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய 6 மாநகராட்சி செல்லப்பிராணி சிகிச்சை மையங்களிலும், சோழிங்கநல்லூர் நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்திலும், மைக்ரோசிப் பொருத்துதல், வெறிநாய் நோய் தடுப்பூசி செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் வாரம் முழுவதும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை இலவசமாக நடைபெறுகின்றன. 14.12.2025க்குள் உரிமம் பெற்றால் அபராதம் தவிர்க்கலாம் என்றும், இதுவரை 91,711 செல்லப்பிராணிகள் பதிவு செய்யப்பட்டு, 45,916 பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *