அண்ணா பல்கலை மாணவிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் சைபர் க்ரைம் டிஎஸ்பி விலகல்.

அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு நீதி மன்றம் பெண்கள் முதன்மை செய்தி வன்கொடுமை

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து டிஎஸ்பி விலகியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (FIR) பொதுவாக வெளியிடப்பட்டதன் மூலம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. சென்னை உயர் நீதிமன்றம், இச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் புக்யா சினேக பிரியா, ஆவடி காவல்துறை துணை ஆணையர் அய்மன் ஜமால், மற்றும் சேலம் மாநகர காவல்துறையின் துணை ஆணையர் பிருந்தா ஆகியோரின் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட்டது. மேலும், மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்குடன் தொடர்புடைய முதல் தகவல் அறிக்கையின் கசிவு சம்பந்தமான வழக்கையும் சேர்த்து, இந்த சிறப்பு குழு விரைவில் விசாரணை மேற்கொள்ளும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறப்பு புலனாய்வுக் குழு கடந்த இரண்டு வாரங்களாக இரண்டு வழக்குகளைப் பற்றிய தீவிர விசாரணைகளை மேற்கொண்டு உள்ளது. இந்நிலையில், அந்த குழுவில் உள்ள மாநில சைபர் க்ரைம் பிரிவு டிஎஸ்பி ராகவேந்திரா கே.ரவி, தனது விலகலைப் பற்றிய தகவலை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். புலனாய்வுக் குழுவில் தேவையான ஒத்துழைப்பு இல்லாததற்கும், கடுமையான அழுத்தத்துடன் பணியாற்ற வேண்டிய சூழ்நிலையினால், ரவி இந்த முடிவை எடுத்ததாக காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *