இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.நாசா மற்றும் ‘இஸ்ரோ’ இணைந்து, 2025ம் ஆண்டு ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்- 4’ என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப திட்டமிட்டு இருந்தது.ஆக்ஸியம் மிஷன் 4 திட்டத்தின், பைலட்டாக இந்திய விமானப்படையில் அனுபவம் வாய்ந்த விமானியான சுபன்ஷு சுக்லா தேர்தெடுக்கப்பட்டார். மே 29ம் தேதி, அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஆக்ஸியம் மிஷன் 4 திட்டத்தின் படி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஏவப்பட இருந்த நிலையில், தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த பயணம் மீண்டும் வரும் ஜூன் மாதம் 8ம் தேதி தொடங்கவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
