8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நுண் கற்காலக் கற்கருவி கண்டெடுப்பு.

அகழ்வாராய்ச்சி இயற்க்கை கண்டுபிடிப்பு சிறப்பு செய்திகள் தமிழ்நாடு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நுண்கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றில் கண்டறியப்பட்ட நுண்கற்கால கருவியின் உயரம் 2.5 செ.மீ மற்றும் நீளம் 2 செ.மீ ஆகும். இது விலங்கின் தோலை அறுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பிளேடு வகையைச் சேர்ந்தது, இதன் காலம் சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. கடலூர் மாவட்டம் ஒடப்பன்குப்பம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதால், இந்த இடத்தில் இதுபோன்ற பல கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், முந்தைய கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட நுண் கற்காலக் கருவி ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் பழைய கற்காலம், நுண் கற்காலக் கருவிகள், பெருங்கற்காலம் (இரும்பு காலம்), சங்ககாலம், பல்லவர் காலம், சோழர் காலம் மற்றும் விஜயநகர காலம் ஆகியவற்றின் தொல்லியல் சான்றுகள் மூலம் கடலூர் மாவட்டத்தின் வரலாற்றின் தொடர்ச்சி தற்போது நமக்கு வெளிப்படையாகக் கிடைத்துள்ளது. பழைய கற்கால மக்களால் உருவாக்கப்பட்ட கரடுமுரடான கல் ஆயுதங்கள் விலங்குகளை விரட்டுவதற்காகவே பயன்படுத்தப்பட்டன. ஆனால், நுண்கற்கால மக்கள் உருவாக்கிய கற்கருவிகள் சிறியதாக இருந்ததால், அவற்றை அம்பு மற்றும் ஈட்டியின் முனைகளில் பொருத்தி, தூரத்தில் இருந்து வேட்டையாடும் போது விலங்குகளின் உடலை துளைக்கும் வகையில் மிகவும் கூர்மையானதாக இந்த கற்கருவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என தொல்லியல் ஆய்வாளர் திரு. இம்மானுவேல் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *