ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்டு வழக்குகள் தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள்

பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகம் போன்ற குற்றச்சாட்டுகளால் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலை நிறுத்தக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் மதுபானம் விநியோகம் செய்வதற்காக ஆளும்கட்சியினர் சட்டவிரோதமாக அமைத்துள்ள கொட்டகைகளை அகற்றக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் விசாரணையின் போது பண பணப்பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பு குழுக்களும், பறக்கும்படைகளும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே உயர் நீதிமன்றம் தேர்தலை நியாயமாக நடத்துவது குறித்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. தொகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கொட்டகைகள் அகற்றி விட்டதாகவும், மீதமுள்ளவற்றிற்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதாகவும், தேர்தல் விதிமீறல் தொடர்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டால் அவற்றில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *