நாவற்குழியில் அமைந்துள்ள மூலிகைத் தோட்டத்தில் குறுங்காடு அமைத்தல் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சிறப்பான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்வு 31.01.2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை இந்திய துணைத் தூதுவர் திரு சாய் முரளி அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், Greenlayer அமைப்பு மற்றும் சிவபூமி அறக்கட்டளை இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளன.இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, மொத்தம் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டு குறுங்காடு உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. நிகழ்ச்சியின் தொடக்க உரையை கலாநிதி ஆறுதிருமுருகன் ஐயா அவர்கள் வழங்கினார்.


