சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் இந்தியாவுக்கு தனது அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். புது டில்லிக்கு விமானம் மூலம் வந்தடைந்த அவரை வெளியுறவு இணையமைச்சர் பாபித்ரா மார்கெரீட்டா வரவேற்றார். பின், தில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் அவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் அடிப்படையில், ஹைதராபாத் இல்லத்தில் இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.பிரதமர் மோடியுடன் சிலி அதிபர் கேப்ரியேல் போரிக் சந்திப்பு, இந்தியா-சிலி உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது.

