மீண்டும் கொரோனா வேகமெடுப்பதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன.
இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் அடையாளம் காணப்பட்ட வைரசின் உருமாறிய எக்ஸ்.பி.பி. 1.5 வைரஸ் அமெரிக்காவில் வேகமாக பரவிவருகிறது என்று நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது சீனாவில் ஒமிக்ரான் வகையை சேர்ந்த உருமாறிய புதியவகை வைரஸ் பி.எப் 7 வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் பி.எப் 7, வைரஸ் பரவ தொடங்கி உள்ளதால் மீண்டும் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் 10 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒமிக்ரான் பி.ஏ.2 என்ற உருமாறிய வைரசின் துணை வைரசான எக்ஸ்.பி.பி. 1.5 என்ற தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பில் 44.11 சதவீதத்திற்கும் அதிகமானோர் எக்ஸ்.பி.பி.1.5 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரசின் உருமாறிய வைரஸ், அமெரிக்காவிலும் சிங்கப்பூரிலும் பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்பட்டுத்த ஆன்டிபாடி தடுப்பூசி போட்டாலும் கூட மிகவும் ஆபத்தானது என கூறப்பட்டுள்ளது.