இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமெரிக்கா அரசியல் உலகம் சிறப்பு செய்திகள் போர்

இஸ்ரேலும் ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பாக  முதற்கட்ட அமைதித் திட்டம்  கையெழுத்திட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 60,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்களின் உயிரை பலி கொண்ட போர் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. எகிப்தில் நடந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் மூன்றாவது நாளில், ஹமாஸ் குழுவினர் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கவும், அதே நேரத்தில் இஸ்ரேல் தனது படைகளை திரும்பப் பெறும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிரம்ப் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது: இஸ்ரேலும், ஹமாஸும் அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதனால் அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள். இதற்காக, எங்களுடன் இணைந்து பணியாற்றிய கத்தார், எகிப்து மற்றும் துருக்கியின் மத்தியஸ்தர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *